2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போதைக்கெதிரான ஊர்வலம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமொன்று, காத்தான்குடியில் இன்று (09) இடம்பெற்றதுடன், போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்பூட்டும் ஸ்டிக்கர்களும் வர்த்தக நிலையங்களிலும் வாகனங்களிலும் ஒட்டப்பட்டன.

இந்த விழிப்புனர்வு ஊர்வலத்தை, சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியமும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து, “போதையிலிருந்து விடுதலையான கிராமத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில், ஏற்பாடு செய்தனர்.

ஊர்வலத்தில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி, சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஹரீஸ் உட்பட அதன் உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .