2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரீ-56 ரக துப்பாக்கி, 16 தோட்டாக்களுடன் மூவர் கைது

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா வீதியை அண்டியுள்ள அத்துப்பட்டி  கிராமத்தில் சந்தேக நபர்களான மூன்று பேரை நேற்று கைது செய்ததாக  தெரிவித்த ஏறாவூர் பொலிஸார்,  சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 16 தோட்டாக்களும் ஒரு கத்தியும் மீட்கப்பட்டதாகவும்   அதேவேளை,வீடொன்றில் சந்தேகத்திற்கிடமாக மூன்று பேர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது  பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன் மூவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும்  35 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .