2024 மே 08, புதன்கிழமை

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக முதல் ஹாஜிகள் குழு பயணம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 26 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை, புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து முதல் ஹாஜிகள் குழு, இன்று (26) பயணமாகியது. கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் மக்கா செல்லும் இந்த முதலாவது குழுவில், 200 பேர் காணப்படுகின்றனர்.

காத்தான்குடியிலிருந்து செல்லும் முதலாவது ஹாஜிகள் குழுவை வழியனுப்பி வைக்கும் வைபவம், காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் முன்னாள் காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, துஆ பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.

இதில், உலமாக்கள், ஹாஜிகள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். காத்தான்குடியிலிருந்து செல்லும் இந்த முதலாவது குழுவில், 90 ஹாஜிமார் செல்கின்றனர்.கிழக்கு மாகாணத்திலிருந்து இம்முறை 1,400 பேர், புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X