2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இ.தொ.காவுக்கு வெளிநாடுகள் அழுத்தம்?

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதுத் தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு, வெளிநாடுகளின் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்துக்கு ஆதரவு வழங்குமாறு இந்தியாவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குமாறு அமெரிக்காவும்,  அழுத்தம் கொடுத்துள்ளதாகத்  தெரியவருகிறது.

மேற்படி இரு நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகள், இ.தொ.காவின் முக்கியப் புள்ளிகளை அழைத்து இந்த அழுத்தத்தை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஊவா முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர், இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகரை அண்மையில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .