Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
“இன, மத பேதமின்றி சுமூகமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மலையகவாழ் மக்களிடையே, இனவாதத்தைத் தூண்டும் அரசியல் கைகூலிகளை, பொதுத்தேர்தலின் மூலம் சூரசம்ஹாரம் செய்ய, நானும் எனது தொப்புள்கொடி உறவுகளும் தயாராகவுள்ளோம்” என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளையில், இன்று (5) நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,
“ஐனநாயக நாடான எம் நாட்டில், இன, மத வேறுபாடுகளின்றிச் சுதந்திரமாக செயற்பட வேண்டும். ஆனால் அதற்கானச் சூழ்நிலையும் சுதந்திரமும், சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. மலையகத்தில் இந்நிலை அதிகரித்துக் காணப்படுகிறது.
“கடந்த காலங்களின், நானும் என் தொப்புள்கொடி உறவுகளும் பேரினவாதிகளிடமிருந்து, எம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடியது அனைவரும் அறிந்ததொன்றாகும். கொரனா வைரஸ் தொற்று நோயைக் காரணங்காட்டி, பெருந்தோட்டக் காணிகளைக் கைப்பற்றுவதற்கு, இனவதிகளால் முன்னெடுக்கப்பட்டச் சதித்திட்டங்களை, என் மக்களுக்குக் காவலனாகக் களத்தில் நின்று தகர்த்தெறிந்தவன் நான்.
“சிறுபான்மை மக்களை ஒருபோதும் சில்லறைத் தனமாக எண்ண வேண்டாம். நடப்பவற்றை எல்லாம் எப்போதும் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதற்கு நாங்கள் மூடர்களும் அல்ல முட்டாள்களுமல்ல. இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதிகளின் செயற்பாடுகளுக்குக் கொடுக்கும் பதிலடியாகவே, இப் பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் தீர்மானங்கள் வெளிப்பட போகின்றன. எனவே, இனவாதிகளின் ஆட்டமும் சலசலப்பும் இன்னும் சில நாள்கள் மாத்திரமே என்பதை நினைவில் கொள்ளுங்கன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
26 Apr 2024
26 Apr 2024
26 Apr 2024