2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கண்டிக்கு செல்லும் பஸ் மஸ்கெலியாவுக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டன் கிளையிலிருந்து, கண்டிக்கு சேவையில் ஈடுபடும் பஸ், மஸ்கெலியா நகர பஸ்தரிப்பிடத்துக்கு வருவதில்லை என்று, பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   

அதிகாலை 4.30 மணிக்கு, சாமிமலை நகரிலிருந்து கண்டிக்கு பயணிக்கும் இந்த பஸ், காலை 8.45 மணியளவில் கண்டியைச் சென்றடைகின்றது என்றும் 9.45 மணியளவில் கண்டியில் இருந்து மீண்டும் நோட்டன் வழியாக சாமிமலை நகரை வந்தடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மீண்டும் சாமிமலை நகருக்கு வரும் பஸ்ஸானது, மஸ்கெலியா நகர பஸ்தரிப்பிடத்துக்கு வருவதில்லை என்று, பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

எனவே இது தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்த வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .