2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோப் சிட்டி வியாபார நிலையம் திறந்து வைப்பு

சிவாணி ஸ்ரீ   / 2018 மார்ச் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரையறுக்கப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையத்தின் கீழ், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை நகரில், 380 இலட்சம் ரூபாய் செலவில் சகல வளங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோப் சிட்டி வியாபார நிலையத்தை, சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், நேற்று (19) திறந்து வைத்தார்.

கேகாலை மாவட்டத்தில், 20 கோப் சிட்டியும் 55 மினி கோப் சிட்டியும்,  வரையறுக்கப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையத்தின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் டபிள்யு.கருணாரத்ன மற்றும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எல்.சந்திர ரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .