2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஜனாதிபதி கோட்டா முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்லர்’

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முஸ்லிம்களுக்கோ அல்லது வேரோர் இனத்துக்கோ அநீதி செய்யக்கூடியவர் அல்லர் என்றுத் தெரிவித்த தொழில் அதிபரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.எம் பாரிஸ், ஜனாதிபதி தனித்துவமான சிறப்புக்குரியவர் என்பதை,  தனக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் நீண்டகால உறவுகள் மூலம் அறிந்துக்கொண்டதாகவும்  தெரிவித்தார்.

பொது தேர்தலில்,  கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும்  அவருக்கு,  மடவளையில் நேற்று (1) வரவேற்பளிக்கப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், எமது சமூகத்தின் அனைத்துவித நிலைமைகள், நிலைப்பாடுகளை தான் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும்  அந்தவகையில் , சமூகத்துக்கான  உரிய சேவைகளை மேற்கொள்ள,  அரசியல் ரீதியான அங்கிகாரம்மொன்று அவசியம் என்றும் தெரிவித்தார்.

எனவே அதற்கான அங்கிகாரத்தை, முஸ்லிம் சமூகம்  வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .