2024 மே 08, புதன்கிழமை

தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையகத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காலை வேளைகளில் பிரதான வீதிகள், அதிக பனிமூட்டம் மற்றும் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதால், மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு, வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நீர்நிலைகள் பெறுக்கெடுத்துள்ளதாகவும் எனவே, கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, தினக்கூலித் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X