2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நடமாடும் சேவை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

இலங்கை மனித உரிமைகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை, கொட்டகலை விநாயகர் ஆலய மண்டபத்தில்,  சனிக்கிழமை (23) நடைபெறவுள்ளது

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மத்திய மாகாணப் பணிப்பாளர் கந்தசாமி கலைச்செல்வம் தலைமையில் நடைபெறும் நடமாடும் சேவையில், அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர் போல், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

நடமாடும் சேவையின்போது 200 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதுடன், வலது குறைந்தோருக்கு பிளாஸ்டிக் கை பிரம்பு, சக்கர நாட்காளிகள் என்பன வழங்கப்படவுள்ளன.

மேலும், 13 பாடசாலைகளை சேர்ந்த தலா 10 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதென, இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் கொட்டகலை கிளைத்தலைவர்8888888888 கருப்பையாபிள்ளை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .