2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பதுளை மாவட்டத்தில் 657,766 பேர் வாக்களிக்கக் தகுதி

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

2019இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில், பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளில், 657, 766 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.

இதற்கமைய மஹயங்கனையிலுள்ள 76 கிராம சேவகர் பிரிவுகளிலும் 103,439 பேரும், வியலுவையிலுள்ள 49 பிரிவுகளில் 54,220 பேரும் பசறையிலுள்ள 62 பிரிவுகளிலும் 66,199 பேரும், பதுளையிலுள்ள 42 பிரிவுகளில் 58,414 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஹாலிஎலையிலுள்ள 58 பிரிவுகளிலும் 73,724 பேரும் ஊவா-பரணகமையிலுள்ள 51 பிரிவுகளில் 65,267 பேரும் வெலிமடையிலுள்ள 1 பிரிவுகளில் 79,159 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

பண்டாரவளையிலுள்ள 65 பிரிவுகளிலும் 88,416 பேரும் ஹப்புத்தளையிலுள்ள 59 பிரிவுகளிலும் 68,928 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .