2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்கள் இடம்பெயர்வு

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

வௌ்ள நீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்துள்ளதால், ஹட்டன் பன்மூர் தோட்டத்தில், 13 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாதுகாப்பான வகையில், சிறுவர் பராமறிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இது உடைப்பெடுத்தால், பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .