2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பஸ் விபத்துக்கு இயந்திரக் கோளாறு காரணமில்லை

பாலித ஆரியவன்ச   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - அலுகொல்லை வீதியின் கந்தேகெதர பகுதியில், அண்மையில் பஸ் ஒன்று 70 ​அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.  

இயந்திரக் கோளாறு காரணமாக, ​குறித்த பஸ் பள்ளத்தில் விழவில்லை எனத் தெரியவந்துள்ளதாக பதுளை மாவட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி கபில எஸ். போகாஹாபிடிய தெரிவித்துள்ளார்.  

மேற்படி விபத்தில் சிக்கி 14 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு, பதுளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து,  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .