2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை, கொலதென்ன ரயில் குறுக்கு வீதியில் இன்று (11) லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹப்புத்தளையில் இருந்து பண்டாரவளை திசை நோக்கிய பயணித்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பொடி மெனிக்கே ரயில் சம்பவ இடத்தை கடந்துச் சென்ற சிறிது நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த ரயிலின் போக்குவரத்து தடைப்படவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .