2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரவைகள் மீட்பு; தவறுதலாக குண்டும் வெடித்தது

கு. புஷ்பராஜ்   / 2019 மே 16 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பிரஸ்ட்டன் தோட்டப் பகுதியின் ஆற்றோரமாக கைவிடப்பட்ட நிலையில் கிடந்த துப்பாக்கி ரவைகள் 12ஐ, அக்கரபத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர். 

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, இவை மீட்கப்பட்டன என்றும் ஆனால், இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், டி-56 ரக துப்பாக்கி ரவைகள் 12ஐ, பொலிஸார் மீட்டுள்ளனர்.  

​இவை, வீதியோரத்திலுள்ள புற்களுக்கு நடுவில் இருந்து கண்டெடுக்கப்பட்டன என்றும் அது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, செவ்வாய்க்கிழமை (14), ஹட்டன் மோப்பநாய்ப் பிரிவில், பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்தார்.  

இதன்போது, மோப்ப நாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .