2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகனங்களை கவனமாக செலுத்துமாறு ஆலோசனை

ஆ.ரமேஸ்   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் சீரற்ற வானிலையால் நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை வரையிலான பகுதியில் மழையுடன்  பனிமூட்டம் வீதியை மறைத்துக் காணப்படுகின்றது.

அத்துடன், நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா மற்றும் பிளக்புல் பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன.

இந்நிலையில், மதிய வேளைகளில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செலுத்த வேண்டும் என்பதோடு, வாகனங்களில் முன்மின்விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களைச் செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்தோடு, மழை தொடர்ந்தும் பெய்து வருவதால் வீதி வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .