2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இளைஞன் கைது

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், அரநாயக்க, சமாகம பிரதேசத்தில் வைத்து, நேற்று (13), ஒருவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து, 8 கிராமும் 400 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரேய்னையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரொருவ​ரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்படி பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞரை, ஹெரோய்னுடன் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .