2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

189 பேர் பொலிஸ் நிலையத்தில் பதிவு

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமாரடீ சில்வா

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 57 பேர், இன்று(18) பதிவு செய்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட் 19 வைரஸானது நாட்டில் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தோர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தங்களை பதிவு செய்யுமாறு, அரசாங்கம் நேற்று (17) உத்தரவிட்டிருந்தது

இதற்கமைய, பேருவளை பொலிஸ் நிலையத்தில், இன்று (18) 132 பேர் பதிவு செய்துள்ளனரென, பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்துக்கு வருகைதர முடியாதவர்கள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பதிவு செய்ய முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .