2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோடரி கொத்து: ஒருவர் காயம்

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

குடும்ப தகராறு முற்றி கைக்கலப்பாக மாறியதில், கோடரி கொத்துக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மந்துவில் கிழக்கை சேர்ந்த ந.கோபாலன் (வயது 60) என்பவரே, இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு நேற்றைய தினம் இரவு 09 மணியளவில் இரு குடும்பஸ்தர்களுக்கு இடையிலும் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே குறித்த குடும்பஸ்தர் கோடாரியால் தாக்கப்பட்டார் .

இத்தாக்குதலை மேற்கொண்டவர் தலைமறைவாகியுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .