Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் யாழ். விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று (28) யாழ்பபாணத்துக்கு விஜயம் செய்தனர்.
இந்த நிலையில், யாழ். சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோட்டாபயவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது “கோட்டாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளை வான் முதலாளி கோட்டாவே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மஹிந்த, கோட்டாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்து” உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
26 Apr 2024