2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

George   / 2017 ஜூன் 14 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும்  தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், 20 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்து இட்டுள்ளனர்.

இப்பிரேரணையை, நாளைய தினம் வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .