Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
சொர்ணகுமார் சொரூபன் / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஊழியர்களை உள்வாங்குவதுக்கான நேர்முகத்தேர்வை நிறுத்துமாறு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை. மாறாக தேர்வை நடத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை. தேர்வை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது” என யாழ்.பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று (21) இடம்பெறவிருந்த கல்விசாரா ஊழியர்களுக்கான நேர்முகத்தேர்வைப் பிற்போடுமாறு கோரி, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் நடாத்தினர்.
இது தொடர்பாக பதிவாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“இந்த தேர்வு நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகத்திலும் இடம்பெறுகிறது. இங்கு இடம்பெறும் பிரச்சினை தொடர்பாக, தேர்வினை நிறுத்துமாறு எனக்கு யாரும் அறிவிக்கவில்லை. தேர்வினை நடத்துமாறே பல்கைலக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்விடயத்தை துணைவேந்தரும் தெரிவித்தார்.
போராட்டத்தில், அரசியல் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது நம் சமூகமே” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
56 minute ago
3 hours ago
7 hours ago