2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

படகு கவிழ்ந்ததில் மீனவர் மாயம்

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததில், மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கட்டைக்காடு கடற்பரப்பில்,  இன்று (28) அதிகாலை படக்கொன்றில், இரண்டு மீனர்கள் தொழிலுக்குச் சென்றனர். இதன்போது, கடலில் ஏற்பட்ட பலத்த காற்றால் அவர்கள் சென்ற படகு கவிழந்துள்ளது. அதனால், கடலில் தந்தளித்த அவர்களை மீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, ஒருவர் மாத்திரமே மீட்கப்பட்டார். கவிழ்ந்த படகும் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .