2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு

Editorial   / 2019 மே 14 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜிதா

பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி பாசையூர் அந்தோனியார் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற சமயம், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .