2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மருத்துவபீட மாணவனின் சடலம் மீட்பு

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் சடலம் குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று (27) மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ்.பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

குறித்த வீட்டிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .