2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மல்லாகம் சந்தியில் விபத்து; மூன்று இளைஞர்கள் படுகாயம்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன் 

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் சந்திப் பகுதியில், இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில், 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதிலேயே, மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற 3 இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக வேகமே, இந்த விபத்துக்குக் காரணமென, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .