2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி

Editorial   / 2018 மே 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் கரவெட்டி கரணவாய் கிழக்குப் பகுதியில் வீட்டின் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெகனாந்தன் (வயது -50) சஞ்சீவன் (வயது29) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் உள்ள ரி.வி தொடர்பு பழுதடைந்தமையால் தொடர்பினை பொருத்த முற்பட்டபோது, மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .