2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்

Editorial   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணை, வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 111ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவையில், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்ற பிரேரணையை, வட மாகாண சபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் முன்மொழிந்தார்.

இதையடுத்து, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளூராட்சி அமைச்சின் கட்டுப்பாட்டில் வருவதால், உள்ளூராட்சி அமைச்சர் அவற்றைக் கையாள வேண்டும் என்று தெரிவித்து, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பதற்கான பிரேரணையை சபை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .