2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 22 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

இம்மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நேற்று 06ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள்கள் வரையில் ஊரடங்கு சட்டத்தின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, முல்லைத்தீவு பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 12 பேரும், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் ஒருவரும், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 06 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பரிவில் 03 பேருமாக 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் இவர்கள், பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனரெனவும் முல்லைத்தீவு பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .