2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானைத் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

கிளிநொச்சி, முரசுமோட்டையில் இன்று அதிகாலை, யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3ஆம் யூனிட், முரசுமோட்டையைச் சேர்ந்த  77 வயதான சி.குருநாதர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பகுதி மக்கள் செறிந்து வாழும் பகுதியாகும், அத்துடன் அண்மைக் காலமாக இராமநாதபுரம் பகுதியில் மனையின் தாக்குதல் அதிகரித்திருந்தது.

இதன்போது, பயன்தரும் மரங்கள் பலவும் அழிக்கப்பட்ட நிலையில், இப்பகுதி மக்கள் தமது பகுதிக்கு மின்சார வேலி அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .