2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வலி. கிழக்கிலும் கூட்டமைப்புக்கு ஈபிடிபி, சுதந்திரக் கட்சி ஆதரவு

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலி. கிழக்கு பிரதேச சபையையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

38 உறுப்பினர்களைக் கொண்ட வலி. கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தேர்வு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

தவிசாளர் தேர்வுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸையும் தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா ஸ்ரீகுமரனையும் பிரேரித்தது.

தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டும் என 34 உறுப்பினர்கள் கோரினர். இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என எவரும் கோரவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸ்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த சண்முகராஜா ஸ்ரீகுமரனுக்கு வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் 4 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சி.நவபாலன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ம.கபிலன் உப தவிசாளராகத் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .