2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாளுடன் சுற்றிய இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றிய இரண்டு இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்று அதிகாலை (27) கைது​செய்யப்பட்டுள்ளனர்.

 சாவகச்சேரி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ,   மட்டுவில்-சிவன்​கோவில் வீதியில் அதிகாலை 3.20 மணியளவில்  குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(27)  சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்குரிய அனுமதிப்பத்திரமும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும், ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக இவர்கள் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் ​தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .