2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி; எட்டு பேர் படுகாயம்

Editorial   / 2019 ஜூலை 14 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் இராணுவ ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஏனையவர்கள் குணமடைந்து வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .