2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

12 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன், ரொமேஷ் மதுசங்க  

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் நேற்று  (20) இரவு 10.30 மணியளவில் கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் தனிமையாக நின்றிருந்த ஒருவரை ரோந்து நடவடிக்கையில் சென்றிருந்த பொலிஸார் சோதனையிட்ட போது, யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி கொண்டுசெல்ல முற்பட்ட 10 கிலோகிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தை சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரை, பொலிஸார் கைதுசெய்தனர். 

இதேவேளை, கொழும்புக்குச் செல்வதற்காக அங்காடிக்கு முன்பாக நின்ற முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் ஜெகதீஸ் (வயது 30) என்பவருடைய பயணப் பொதியில் இருந்து, 2 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .