2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரும்பு கம்பியால் கட்டப்பட்ட நிலையில் எலும்புகூடு மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக நேற்று (06) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள்  காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று (06) கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வழுப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்சியாக சந்தேகத்துக்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .