2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உடைக்கப்பட்ட மதில் மீள் நிர்மாணம்

எஸ்.என். நிபோஜன்   / 2018 மார்ச் 14 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் மீண்டும் விமானப்படையினரால், அமைக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் மைதான காணியில் அமைக்கப்பட்ட சுற்று மதில் திங்கட்கிழமை (12) இரவு விசமிகளால் உடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது மீண்டும் விமானப்படையினரால் அமைக்கப்படுகின்றது.

பாடசாலை சமூகத்தினர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 1600 அடி நீளமான மதில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ், 40 இலட்சம் ரூபாய் செலவில் விமானப்படையினரால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .