2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள குடும்பம்

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - வெலிஓயா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலம்பவெவ பகுதியில், மகாவலி அதிகார சபையின் பக்கச்சார்பான திட்டமிட்ட நடவடிக்கை மூலம் தாம் பழிவாங்கப்படுவதாகத் தெரிவித்து, தனது 9 பிள்ளைகள் சகிதம் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் கடை ஒன்றை அமைக்க முற்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி, குறித்த இடத்தை யானை வேலி அமைத்து அபகரித்து தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் இதற்கு தீர்வு இல்லையேல் தான் குறித்த இடத்திலேயே செத்தாலும் தான் போராட்டத்தை கைவிடமாட்டேன் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,  தனக்கு தீர்வு தராது தன்னை பலாத்காரமாக எழுப்ப முயற்சித்தால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .