2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்தவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு – துணுக்காய், ஆரோக்கியபுரம் குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்துமாறு, ஆரோக்கியபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் துணுக்காய் பிரதேச சபையால் ஆரோக்கியபுரம் கிராமத்தில் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் ஐம்பது வரையான குடும்பங்களே பயன்பெறுகின்றன. மிகுதி ஐம்பது குடும்பங்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. 

இந்நிலையில் ஏனைய ஐம்பது குடும்பங்களுக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அல்லது புதிய குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இக்கிராம மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .