2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேரள கஞ்சா மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், இன்று (17) சூட்சகமமான முறையில் கேரள கஞ்சா கடத்திச் செல்ல முற்பட்ட நால்வரை, கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, 4 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அம்பாள்குளம் பகுதியில், வாகனமொன்றை வழிமறைத்து சோதனை மேற்கொண்ட போது, அந்த வாகனத்துக்குள் இருந்த மெத்தைக்குள் சூட்சகமமான முறையில் 2 கிலோகிராம் கேரளா கஞ்சா மறைத்து கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இதன் பின்னர், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாகத் தரித்து நின்ற ஓட்டோவை சோதனை செய்த பொலிஸார், அதிலிருந்தும் 2 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இதன்போது, இருவர் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .