Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாப்பாமோட்டை பிரதேசத்திலுள்ள பதுங்கு குழியொன்றில் இருந்து, நேற்று (04) ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பதுங்கு குழி, விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டது என எபாலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 81 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் நான்கும், 60 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளன.
விமானப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு பிரிவு தகவல்களுக்கமைய குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தரவுக்கமைய, குறித்த வெடிபொருட்கள் இராணுவ வெடிகுண்டு அகற்றும் பிரிவினால் கண்காணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago