2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மனைவியின் இறுதி சடங்குக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த ஆயுள் கைதி

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன்

 

சுகவீனம் காரணமாக உயிரிழந்த மனைவியின் இறுதி சடங்குக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவரது மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி, கடந்த 15ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இவரின் இறுதி சடங்கு, இன்று (18) கிளிநொச்சி - மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்த சுதாகர் அழைத்து வரப்பட்டு, மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

இதன்போது, தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம், அனைவரினதும் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு, மகனும் மகளும் உள்ளனர்.

தந்தை 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டப் பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்த நிலையில் உள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .