2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் மக்களின் கவனத்துக்கு

Niroshini   / 2021 மே 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த எண்ணெய் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு, அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, அவ்வாறு தொடர்ச்சியாக, இவ்வாறான எண்ணெய் விற்பனை மேற்கொள்ளும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உட்பட விற்பனை முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.

எனவே, தேங்காய் எண்ணெய் கொள்வனவில் ஈடுபடும் போது, பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .