2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதிரை மரக்குற்றிகள் மீட்பு : 7 பேர் கைது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மே 01 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட பெறுமதி மிக்க முதிரை மரக்குற்றிகள் நேற்று (30) இரவு மீட்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் வழிகாட்டியாக செயற்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .