2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Niroshini   / 2021 ஜனவரி 24 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-க. அகரன்

வவுனியா - தண்டுவான் பகுதியில், நேற்று  (23) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக் கரையில் இருந்த மின்சார தூணுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

இதன்போது, மோட்டார் சைக்களில் பயணித்த நெடுங்கேணி - கரடிப்புலவு பகுதியை சேர்ந்த  தயாபரன் (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .