2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய குடும்பத்தினர் மீட்கப்பட்டனர்

எஸ்.என். நிபோஜன்   / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய 6 பேர் இராணுவம், விமானப்படையினரால் இன்று (09) காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (07) குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்து வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அவ்வனர்த்தத்தில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியை பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.

அவ் முயற்சியால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்க இராணுவத்தினர், கடற்படை மேற்கொண்ட முயற்சியால், உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் மீட்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .