2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியசாலைக்குள் நுழைந்து சோதனை நடத்திய மர்ம நபர்

Editorial   / 2018 ஜூலை 10 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

தன்னை மருத்துவ அதிகாரியென அறிமுகப்படுத்திக்கொண்டு, வைத்தியசாலைக்கு வந்த இனந்தெரியாத நபரொருவர், அவ்வைத்தியசாலைக் காவலாளியின் மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று, முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு பகுதியில், நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது. 

உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன்னை மருத்துவ அதிகாரி என அடையாளப்படு த்திக்கொண்டு, வைத்தியசாலையை பரிசோதனை செய்துள்ளார். 

இதையடுத்து, தனது மோட்டார் சைக்கிளுக்கு வரி மற்றும் காப்பீடு இல்லை எனக் கூறி, அவ்வைத்தியசாலையில் கடமையாற்றிய காவலாளியின் மோட்டார் சைக்களையும் வரி, காப்புறுதி அட்டைகளையும் பெற்றுக்கொண்டு, அளம்பில் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு சோதனை செய்யபோவதாகக் கூறிச் சென்றுள்ளார். 

இதுவரை மோட்டார் சைக்கிள் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட காவலாளி, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பில் பொலிஸாரும் வைத்தியசாலை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .