2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எருமை மாட்டுக்கு பிறந்தநாள் கொண்டாடினர்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா அருகே ரன்னபெலஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சித்து மகாதேவ தாரி. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சித்து, ஒரு எருமை மாட்டை வாங்கி இருந்தார். 

அந்த எருமை மாட்டின் பாலை சித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த எருமை மாட்டின் முதலாவது பிறந்தநாளை சித்து தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நேற்று கொண்டாடினார். அப்போது கேக் வெட்டிய சித்து, எருமை மாட்டிற்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தார். மேலும் உறவினர்களுக்கும் சித்து உணவு அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .