2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Super User   / 2010 பெப்ரவரி 02 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச்சான்றிதழை இந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  இலங்கையிடமிருந்து பெற்றுக்கொண்டதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்திய முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் பிரபாகரனின் மரணச் சான்றிதழுக்கு காத்திருப்பதாக இந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .