2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் சிறு,நடுத்தர முதலீட்டாளர்களுக்கு பயிற்சி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை பயிற்றுவிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாகாண அமைச்சர் திருமதி. அனூஷியா சிவராசாவின் வலிகாட்டலின்படி இதன் ஒரு பயிற்சி பட்டறை பூஜாபிட்டிய மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இப்பிரதேசத்தை சேர்ந்த 50 சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். மத்திய மாகாண சபை உறுப்பினர் குனதிலக ராஜபக்ஷ உட்பட அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வுக்கு பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .