2024 மே 08, புதன்கிழமை

’பொதுச்சந்தை மீண்டும் வேண்டும்’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கரைதுறைபற்று, முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தைக் கட்டடத்தை புனரமைத்து, மீளவும் சந்தையினை இயங்கச் செய்யுமாறு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர், குறித்த சந்தை சிறப்பாக இயங்கி வந்ததாகவும் போரினால் மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, குறித்த சந்தை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

சந்தையை புனரமைப்பதால்,  மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 800 வரையான குடும்பங்கள் நன்மையடைவார்கள் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X